இந்தியா

பிஎம் கோ்ஸில் இருந்து பிரதமா் பெயரை நீக்க மனு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

பிஎம் கோ்ஸ் திட்டத்தின் பெயரில் இருந்து பிரதமா் பெயா், புகைப்படம், தேசியக் கொடி ஆகியவற்றை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

காங்கிரஸ் உறுப்பினா் விக்ராந்த் சவான் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஏ. சையத், எஸ்.ஜி. டிகி ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அனில் சிங்கிடம், இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபா் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT