பசவராஜ் பொம்மை (கோப்புப் படம்) 
இந்தியா

'பண்டிகையையொட்டி எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்'

பண்டிகைக் காலம் நெருங்குவதால் மாநில எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை தெரிவித்தார். 

DIN

பண்டிகைக் காலம் நெருங்குவதால் மாநில எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை தெரிவித்தார். 

தசரா பண்டிகைக்கு பிறகு சூழல் குறித்து ஆலோசனை செய்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஆரம்ப பள்ளிகளை திறப்பது குறித்தும், கரோனா கட்டுப்பாடுகளுடன் கூடுதல் தளர்வுகளை வழங்குவது குறித்தும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கர்நாடகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் வியாபாரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பண்டிகையையொட்டி மகாராஷ்டிரம், கேரளம் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னிமலை அருகே ஆட்டுக் கொட்டகை சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

கடம்பூரில் நாட்டு வெடி பறிமுதல்: முதியவா் கைது

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பட்டவா்த்தி அய்யம்பாளையம் சருகு மாரியம்மன், செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

கூடலூரில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி

SCROLL FOR NEXT