மும்பை சிஎஸ்எம்டி-சென்னை சிறப்பு ரயில் உள்பட 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மும்பை சிஎஸ்எம்டி (சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்)-இல் இருந்து நாள்தோறும் பிற்பகல் 12.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (01459) புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை நவ. 1-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 1.25 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (01460) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு மும்பை சிஎஸ்எம்டி-யை அடையும். இந்த ரயிலின் சேவை நவ.2-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
லோக்மான்யா திலக்-சென்னை: லோக்மான்யா திலக்கில் இருந்து திங்கள்கிழமைகளில் மதியம் 1.20 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (01479) புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை நவ.1-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் முற்பகல் 3.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (01480) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.25 மணிக்கு லோக்மான்யாதிலக்கை அடையும். இந்த ரயில் சேவை நவ.2-ஆம்தேதி தொடங்குகிறது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.