பஞ்சாப் காங்கிரஸ் விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருடன் ஹரீஷ் ராவத் இன்று ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சரண்ஜித் சன்னி சில விஷயங்கள் குறித்து பேசினர். விரைவில் தீர்வு எட்டப்படும். ஆனால், சில விஷயங்களுக்கு நேரம் எடுக்கும்" என்றார்.
இதையும் படிக்க | ஆர்யன் கான் ஜாமீன் மனு: அக். 20-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
முன்னதாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து கடந்த செப்டம்பர் 28-ம் தேதி ராஜிநாமா செய்தார். ஆனால், அவரது ராஜிநாமாவைக் கட்சி ஏற்கவில்லை. அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சிக்குள் ஏற்பட்ட இந்தக் குழப்பம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.