முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் தொடரும் தாக்குதல்: ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் பலி

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் இன்று காலை தீவிரவாதிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டனர்.

Updated On : 15 அக்டோபர், 2021 at 11:28 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் இன்று காலை தீவிரவாதிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டனர்.

பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவத்தினர் தரப்பிலிருந்து தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

Advertisement

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் இந்த வாரத்தில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்களை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் இருவர் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.