இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் தொடரும் தாக்குதல்: ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் பலி

ANI

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் இன்று காலை தீவிரவாதிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டனர்.

பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவத்தினர் தரப்பிலிருந்து தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் இந்த வாரத்தில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்களை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் இருவர் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT