இந்தியா

நாட்டை யார் வழிநடத்துகிறார்கள்? ஆர்எஸ்எஸ் மோகன் பாகவத் கருத்துக்கு சிவசேனை கேள்வி

DIN

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் கேள்வி எழுப்பியுள்ளார்

நாட்டில் தேசவிரோத சக்திகள் போதைப் பொருள் கடத்தலுக்கு நிதியுதவி அளித்துவருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மோகன் பாகவத் தெரிவித்த கருத்து தொடர்பாக பேசிய சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத், யார் மத்திய அரசை வழிநடத்தி வருகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் போதைப் பொருள் கடத்தல் மூலம் பெறப்படும் பணம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தால் நாட்டை தற்போது யார் வழிநடத்தி வருகிறார்கள்? பணமதிப்பிழப்பின் மூலம் போதைப் பொருள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பதையும் சஞ்சய் ரெளத் சுட்டிக்காட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT