முகப்பு
இந்தியா

ஹைதராபாத் விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபையிலிலிருந்து கடத்திவரப்பட்ட 6.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
ஹைதராபாத் விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல்
பகிர்:

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபையிலிலிருந்து கடத்திவரப்பட்ட 6.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு நேற்று(அக்-19) வந்த  பயணியைப் பரிசோதனை செய்தபோது பேட்டரி விளக்கில் 6.06 கிலோ தங்கத்தை மறைத்து  கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2.97 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த அக்-6 ஆம் தேதி சூடானிலிருந்து துபை வழியாக ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியை பரிசோதனை செய்தபோது உள்ளாடையில் மறைத்து ரூ.43 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ  தங்கத்தை  கடத்திவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.