ஐ.ஜி. விஜய் குமார் 
இந்தியா

ஜம்மு - காஷ்மீர்: 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கடந்த 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

ANI

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கடந்த 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் தீவிரவாதிகளால் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் பலியாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில்,

“இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் அடில் ஆஹ் வானி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், கடந்த வாரம் புல்வாமாவில் தொழிலாளரை கொன்றதில் சம்பந்தப்பட்டுள்ளார். மேலும், கடந்த 2 வாரத்தில் மட்டும் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

12.2.1976: த.நா. திட்டம் - சேலம் உருக்காலை, நெய்வேலி சுரங்க ஒதுக்கீடுகள் உயரலாம்

மும்பை மேயராக ரீத்து தாவ்டே போட்டியின்றி தோ்வு - 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக மேயா்

இந்தியா வரி குறைக்கும் பொருள்கள் பட்டியல்: பருப்பு வகைகளை நீக்கியது அமெரிக்கா

தமிழகம், புதுவை சட்டப் பேரவைத் தோ்தல்: தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு சென்னை வருகை

போலி மருத்துவா்கள் மூலம் முடி மாற்று சிகிச்சை: கண்காணிப்பதில் நிலவும் சிக்கல்

SCROLL FOR NEXT