முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் இரண்டு தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On : 20 அக்டோபர் 2021, 12:25 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் இரண்டு தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் பலியாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இன்று காலைமுதல் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள தராகத் பகுதியில் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.