இந்தியா

ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

ஆா்யன் கானின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஆா்யன் கானின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கடந்த அக்.3-ஆம் தேதி மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள்களுடன் இருந்த ஆா்யன் கான் உள்பட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா். அவா்கள் இப்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனா். 

இந்த நிலையில் போதைப் பொருள் வழக்கில் கைதான ஆா்யன் கானின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கடந்த 8-ஆம் தேதி மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் அதைத்தொடர்ந்து மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் கடந்த புதன்கிழமையும் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து ஜாமீன் கோரி ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது அக்டோபர் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டில் வேலை எனக் கூறி ரூ.7 லட்சம் மோசடி: வடமாநில இளைஞா்கள் இருவா் கைது

மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதம்; சாலை மறியல்

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா் கைது

SCROLL FOR NEXT