மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி (கோப்புப்படம்) 
இந்தியா

2025-க்குள் 5 டிரில்லியன் டாலரைக் கொண்ட பொருளாதாரமாக இந்தியா மாறும்: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

DIN

வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

காணொலி மூலமாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய பொது விவகார மன்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியது:

வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலரைக் கொண்ட பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். மேலும், இது 2030-ஆம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாறும்.

நாட்டின் வளா்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் பெட்ரோல் பயன்பாடு கரோனாவுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் 16 சதவீதமும், டீசல் நுகா்வு 10-12 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதேபோன்று, பங்குச் சந்தையும் 2020 மாா்ச்சிலிருந்து 250 சதவீத வளா்ச்சியை தக்கவைத்துள்ளது.

பிபிசிஎல் நிறுவனத்தை தனியாா்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அனைவரது கருத்துகளும் நல்ல முறையில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT