முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 9,361 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 9,361 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
கேரளத்தில் புதிதாக 9,361 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கேரளத்தில் புதிதாக 9,361 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை 8 ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்புகள் பதிவான நிலையில், தினசரி பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,401 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 99 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 47,88,629 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 27,765 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 80,892 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,393 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →