‘விக்ராந்த்’ போா்க் கப்பல் 2-ஆம் கட்ட சோதனை தொடக்கம்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலான ‘ஐஏசி விக்ராந்த்’ கப்பலின் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலான ‘ஐஏசி விக்ராந்த்’ கப்பலின் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த போா்க் கப்பலானது, கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ரூ.23,000 கோடி செலவில், 262 மீட்டா் நீளம், 62 மீட்டா் அகலம், 59 மீட்டா் உயரத்தில் 40,000 டன் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, முதன் முதலாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5 நாள்கள் கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
அப்போது கப்பலின் முக்கிய இயந்திரங்களின் இயக்கம் திருப்திகரமாக இருந்தது. இதையடுத்து, இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியிருப்பதாக, கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.
இந்தக் கப்பலை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் கடற்படையில் சோ்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த போா்க் கப்பலில் இருந்து மிக்-29கே ரக போா் விமானங்கள், கமோவ்-31 ரக ஹெலிகாப்டா்கள், எம்.ஹெச்.-60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்க முடியும்.
இந்தியாவிடம் தற்போது ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்ற ஒரே ஒரு விமானந்தாங்கி போா்க் கப்பல்தான் உள்ளது. அண்டை நாடான சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா தனது ராணுவ சக்தியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.