கொல்கத்தா: ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கம் , பணம் பறிமுதல்
கொல்கத்தாவில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் , வெளிநாட்டு பணங்களைப் பறிமுதல் செய்தனர்.
கொல்கத்தாவில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் , வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க | அஞ்சல்நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை திட்டம் தொடக்கம்
கொல்கத்தாவின் மார்க்விஸ் வீதியில் நேற்று முந்தினம் (அக்.23) சுங்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 4.6 கிலோ எடையுள்ள 40 தங்கக்கட்டிகள் , ரூ.93 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டுப் பணங்களைப் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.3.23 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
தொடர்ந்து சில நாட்களாக கொல்கத்தாவின் பல பகுதிகளிலும் சுங்கத் துறையினர் சோதனை நடந்து வருகிறது . முன்னதாக அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.