முகப்பு
இந்தியா

ம.பி: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த எம்எல்ஏ மகன் கைது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த எம்எல்ஏ மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
ம.பி: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த எம்எல்ஏ மகன் கைது
பகிர்:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த எம்எல்ஏ மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினி மாவட்டத்தைச் சேர்ந்த பத்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான முரளி மோர்வாலின் மகன் கரன் மோர்வால்(30) தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என இளம் பெண் தெரிவித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கடந்த ஏப்ரல் -2 ஆம் தேதி வழக்குப் பதியப்பட்டது.

ஆனால் இதை அறிந்த கரன் மோர்வால் காவல்துறையினரிடமிருந்து தப்பித்து கடந்த  6 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த ஏப்ரல்-2 தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியைப் பிடிக்க 6 மாதமா? என சமூகவலைதளத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக கரனைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.25,000 சன்மானம் தர காவல்துறையினர் முன்வந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →