முகப்பு
தமிழ்நாடு

மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறித்து...

Updated On : 18 மார்ச், 2026 at 12:58 PM
பிரேமலதா / தேமுதிக தலைமை அலுவலகம்
பகிர்:

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

’தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் (23.03.2026) திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.

தேர்தல் நெருங்கிவருவதால், திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை பேரவைத் தொகுதிகள் கேட்டுப் பெறுவது என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

summary

The DMDK district secretaries meeting will be held on March 23rd.

முழு கட்டுரையைப் படிக்க →