இந்தியா

‘பாக். வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு’: உ.பி. முதல்வர்

ANI

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா-பாகிஸ்தான் இடையே 20 ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடா்ந்து பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

அதில், வெற்றியை கொண்டாடிய உத்தரப்பிரதேச மாநிலத்தின் 5 மாவட்டங்களை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 7 பேர் மீதும் தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT