இந்தியா

புனித் ராஜ்குமார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

DIN

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது அவருடைய மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் , நடிகர்களும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , ‘ விதியின் கொடூரம் திறமைமிக்க , ஆளுமைமிக்க ஒருவரை நம்மிடம் இருந்து பறித்துவிட்டது. இது மரணிக்கும் வயது இல்லை. அவருடைய இழப்பை வரும் தலைமுறையினர் உணர்வார்கள். அவரின் குடும்பத்தாருக்கும் நலவிரும்பிகளுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT