காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 
இந்தியா

‘உத்தரப்பிரதேசத்தில் மின்கட்டணக் கொள்ளையை ஒழிப்போம்’: பிரியங்கா காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மின்கட்டணம் என்கிற பெயரில் நடந்துவரும் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மின்கட்டணம் என்கிற பெயரில் நடந்துவரும் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணம் என்கிற பெயரில் மக்களிடமிருந்து கொள்ளையடிப்பதை ஒழிப்போம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

தனது சுட்டுரைப் பதிவில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,  “பாஜக ஆட்சியில் மின் கட்டணம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் கொள்ளையால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் இந்த மின் கட்டண கொள்ளை முடிவுக்கு வரும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தரப்பிரதேசத்தில் தொழிலாளி ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.19 கோடியே 19 லட்சம் மின்கட்டணம் செலுத்தக்கோரி வெளியான மின்துறையின் நோட்டிஸை பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT