FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பழிவாங்க பாலியல் புகாரளித்த தங்கை; 2 ஆண்டுகள் சிறையிலிருந்த அண்ணன்

பழிவாங்குவதற்காக, தனது அண்ணன் மீதே பொய்யாக பாலியல் புகாரளித்த தங்கையால், சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை, சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.

Updated On : 2 செப்டம்பர் 2021, 12:21 pm IST
பழிவாங்க பாலியல் புகாரளித்த தங்கை; 2 ஆண்டுகள் சிறையிலிருந்த அண்ணன்
பகிர்:


பழிவாங்குவதற்காக, தனது அண்ணன் மீதே பொய்யாக பாலியல் புகாரளித்த தங்கையால், சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை, சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.

மும்பையில், தங்கை அளித்த பொய்ப் புகாரால், இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அண்ணன் மீது கருணை ஏற்பட்டு, தான் தனது ஆண் நண்பருடன் வெளியே சுற்றுவதைக் கண்டித்ததால், ஆத்திரத்தில், பொய்ப் புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தங்கை வாக்குமூலம் அளித்ததால், அவர் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. பெண் அளித்த புகாரில், தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியிருந்தார். இந்த வழக்கில், புகாரளித்த பெண்ணும், விசாரணை அதிகாரியும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments