பழிவாங்க பாலியல் புகாரளித்த தங்கை; 2 ஆண்டுகள் சிறையிலிருந்த அண்ணன் 
இந்தியா

பழிவாங்க பாலியல் புகாரளித்த தங்கை; 2 ஆண்டுகள் சிறையிலிருந்த அண்ணன்

பழிவாங்குவதற்காக, தனது அண்ணன் மீதே பொய்யாக பாலியல் புகாரளித்த தங்கையால், சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை, சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.

DIN


பழிவாங்குவதற்காக, தனது அண்ணன் மீதே பொய்யாக பாலியல் புகாரளித்த தங்கையால், சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை, சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.

மும்பையில், தங்கை அளித்த பொய்ப் புகாரால், இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அண்ணன் மீது கருணை ஏற்பட்டு, தான் தனது ஆண் நண்பருடன் வெளியே சுற்றுவதைக் கண்டித்ததால், ஆத்திரத்தில், பொய்ப் புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தங்கை வாக்குமூலம் அளித்ததால், அவர் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. பெண் அளித்த புகாரில், தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியிருந்தார். இந்த வழக்கில், புகாரளித்த பெண்ணும், விசாரணை அதிகாரியும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

SCROLL FOR NEXT