புணேவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
புணேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்படவுள்ளது. இந்த அறிவியல் நகரத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்படும்.
மேலும், இந்த நகரமானது ரூ. 191 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரிலிருந்து ராஜீவ் காந்தி பெயரை மத்திய அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.