‘இதுவரை 67.65 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 67.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 67.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 51,88,894 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 67,65,00,301 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 26,66,03,686 இரண்டாம் தவணை - 3,20,41,597 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 13,50,91,616 இரண்டாம் தவணை - 5,70,00,670 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 1,03,60,234 இரண்டாம் தவணை - 84,47,084 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,58,383 இரண்டாம் தவணை - 83,89,866 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,28,369 இரண்டாம் தவணை - 1,34,51,798 |
| மொத்தம் | 67,65,00,301 |