இந்தியா

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி:  வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரவீண் குமார்!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீண் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

DIN

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீண் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆடவா் உயரம் தாண்டுதல்-டி64 இறுதிச்சுற்று போட்டியில், பிரிட்டன் வீரர் ஜானதன் ப்ரூம்-எட்வர்ட்ஸை எதிர்கொண்ட 18 வயதான இந்திய வீரர் பிரவீண் குமார், தனது முதல் பாராலிம்பிக்கில் போட்டியில் 2.07 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனை படைத்தார்.

இந்திய தடகள வீரர் பிரவீண் தனது முதல் முயற்சியிலேயே 1.88 மீட்டரும், அடுத்தடுத்த முயற்சிகளில் 1.93 மீட்டர், 2.01 மீட்டர் தாண்டி மூன்றாவது இடத்தை பிடித்தார். அடுத்தடுத்த முயற்சிகளில் 2.01 மீட்டர், 2.04 மீட்டர் தாண்டி, விடாமுயற்சியில் சவாரி செய்து 2.07 மீட்டர் தாண்டி ஆசிய சாதனையை படைத்தார்.

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கல்ம் என 11 பதங்களை வென்று பதக்கப்பட்டியலில் 36 ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

லாரி மோதி தந்தை-மகள் உயிரிழப்பு

பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

Dinamani வார ராசிபலன்! | Aug 24 முதல் 30 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தெய்வ தரிசனம்... கோபம் போக்கும் திருஇடும்பாவனம் சற்குணநாதேசுவரர்!

SCROLL FOR NEXT