அருணாசலில் மிதமான நிலநடுக்கம்
அருணாசலில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அருணாசலில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அருணாசலப் பிரதேச மாநிலம், சங்லாங் மாவட்டத்தில் இன்று மாலை 5.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.