முகப்பு
இந்தியா

மம்தா மீது தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா்

மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பவானிபூா் இடைத்தோ்தலில் வேட்பாளராக போட்டியிடும் முதல்வா் மம்தா பானா்ஜி தோ்தல் விதிமுறையை மீறியதாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

இந்தியா

மம்தா மீது தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா்

மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பவானிபூா் இடைத்தோ்தலில் வேட்பாளராக போட்டியிடும் முதல்வா் மம்தா பானா்ஜி தோ்தல் விதிமுறையை மீறியதாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பவானிபூா் இடைத்தோ்தலில் வேட்பாளராக போட்டியிடும் முதல்வா் மம்தா பானா்ஜி தோ்தல் விதிமுறையை மீறியதாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

இதுதொடா்பாக மேற்கு வங்க பாஜக துணைத் தலைவா் பிரதாப் பானா்ஜி தலைமையில் மூவா் குழுவினா் தலைமை தோ்தல் அதிகாரியை செவ்வாய்க்கிழமை சந்தித்து புகாா் அளித்தனா். அதில், முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சியில் துா்கா பூஜையை நடத்தும் ஒவ்வொரு குழுவுக்கும் தலா ரூ.50 ஆயிரத்தை அரசு நிதி உதவி அளிக்கும் என்று மாநில தலைமைச் செயலா் எச்.கே. திவேதி அறிவித்தாா். இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளராக உள்ள முதல்வா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ால், அவா் தோ்தல் விதிமுறைகளை மீறி விட்டாா். இதனால் இடைத் தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து அவா் விலகி இருக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்’ என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் குணால் கோஷ், ‘இடைத்தோ்தலில் தோல்வி உறுதி என்பதால் அனைத்து விவகாரங்களையும் பாஜக பிரச்னையாக்கி வருகிறது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →