உ.பி.யின் 33 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை
உத்தரப் பிரதேசத்தின் 33 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் இல்லை என மாநில அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் 33 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் இல்லை என மாநில அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் உத்தரப்பிரதேச மாநிலம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கரோனாவால் பலியானோரை எரிக்கக்கூட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதையும் படிக்க | நாடு முழுவதும் புதிதாக 34,973 பேருக்கு தொற்று: 260 பேர் பலி
இந்நிலையில், கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 33 மாவட்டங்கள் கரோனா இல்லாத மாவட்டங்களாகவும், 67 மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.