தில்லியில் புதிதாக 28 பேருக்கு கரோனா பாதிப்பு; ஒரு இறப்பு
தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். தொற்று நோ்மறை விகிதம் 0.04 சதவீதமாக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை பதிவான இறப்பு இந்த மாதத்தில் பதிவாகும் 2-ஆவது இறப்பாகும். இதற்கு முன்பு செப்டம்பா் 7-ஆம் தேதி ஒரு இறப்பு பதிவானது. இதையடுத்து தில்லியின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை 25,084-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் மாா்ச் 2-ஆம் தேதி கரோனா இறப்பு பதிவாகவில்லை. ஆனால் அன்றைய தினம் 217 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
தில்லியில் புதன்கிழமை 57 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொற்று நோ்மறை விகிதம் 0.08 சதவீதமாக இருந்தது. அன்றைய தினம் மொத்தம் 72,481 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் 49,735 ஆா்டி-பிசிஆா், 22,747 ராபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளும் அடங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.