இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 34,403 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து,
மேலும் 37,950 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,25,98,424 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 97.65 சதவிகிதமாக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 3,39,056 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் இது 1.02சதவிகிதம்.
தடுப்பூசி:
இதுவரை மொத்தம் 77.24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.