பாஜகவுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் பாபுல் சுப்ரியோ சனிக்கிழமை திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் மாற்றியமைக்கபட்டபோது பாபுல் சுப்ரியோவிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையும் படிக்க | பாஜகவின் இ-ராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: அகிலேஷ்
மேலும், மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் தொடங்கியதிலிருந்து மாநில பாஜக தலைவா்களுடன் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக இருந்த அவர் தனது முடிவைக் கைவிட்டார். இந்நிலையில் பாபுல் சுப்ரியோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டீரக் ஓபிரைன் முன்னிலையில் திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்