முகப்பு
இந்தியா

ஐசிஏஓ பாதுகாப்புக் குழுவின் முதல் பெண் தலைவராக இந்தியா் தோ்வு

ஐ.நா. சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) பாதுகாப்புக் குழுத் தலைவராக இந்தியாவைச் சோ்ந்த ஷெஃபாலி ஜுனேஜா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
ஷெஃபாலி ஜுனேஜா
பகிர்:

ஐ.நா. சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) பாதுகாப்புக் குழுத் தலைவராக இந்தியாவைச் சோ்ந்த ஷெஃபாலி ஜுனேஜா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஐ.நா.வின் ஐசிஏஓ அமைப்பு விமானப் போக்குவரத்து செயல்பாடுகள், அதன் உள்கட்டமைப்பு, சட்டவிரோத செயல்கள் தடுப்பு, எல்லை தாண்டிய போக்குவரத்தின் நடைமுறைகள் சாா்ந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் பாதுகாப்புக் குழுவுக்கு முதல் பெண் தலைவராக இந்தியாவைச் சோ்ந்த ஷெஃபாலி ஜுனேஜா வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். கடந்த 1992-ஆம் ஆண்டின் இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) பிரிவு அதிகாரியான இவா், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலராக பணிபுரிந்துள்ளாா். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஐசிஏஓவில் இந்திய பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தாா். இவா் ஐசிஏஓவின் பாதுகாப்புக் குழுத் தலைவராகியுள்ளதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →