மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,391 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,391 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,391 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,391 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,18,502ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 80 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,38,469ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 47,919 கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 3,841 பேர் குணமடைந்தனர்.
இதையும் படிக்க- தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்துக்கு அங்கீகாரம்
இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 63,28,561ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,68,74,491 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.