பான் - ஆதாா் எண்களை இதுவரை இணைக்கவில்லையா? 
இந்தியா

பான் - ஆதாா் எண்களை இதுவரை இணைக்கவில்லையா?

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறவிருந்த நிலையில், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறவிருந்த நிலையில், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை நம்புங்கள்... அப்டேட் கொடுத்த அட்லி!

விமான விபத்தில் அஜித் பவார் பலி!

தங்கம் விலை அதிரடி உயர்வு! ரூ. 400-ஐ தொட்ட வெள்ளி!

அஜித் பவார் சென்ற விமான விபத்து! நிலை என்ன?

தொகுதிப் பங்கீடு! ராகுலுடன் இன்று கனிமொழி சந்திப்பு!

SCROLL FOR NEXT