இந்தியா

பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு

DIN


பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளருமான ஹரீஷ் ராவத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதனால், பஞ்சாப் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்தது.

இந்த நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுபற்றிய அறிவிப்பை ஹரீஷ் ராவத் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறுகையில், "இது கட்சி மேலிடத்தின் முடிவு. இதை நான் வரவேற்கிறேன். சன்னி எனது இளைய சகோதரரைப் போல. அதனால், நான் ஏமாற்றமடையவில்லை." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT