ஜம்மு - காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.
பாட்னிடாப் என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை பறந்து கொண்டிருந்தது. அப்போது ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்துள்ளனர்.
ஆனால், மலைப் பகுதியில் தரையிறக்கியதால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதிலிருந்த இரண்டு விமானிகளையும் காயங்களுடன் மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.