இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தல்: வேட்பாளருக்கு போஸ்டர் ஒட்டிய மத்திய அமைச்சர்

PTI

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்பாளரின் போஸ்டரை சுவற்றில் ஒட்டினார்.

மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டியிடவுள்ளார்.

இதையடுத்து, பாஜக வேட்பாளர் பிரியங்காவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று வீடுவீடாக சென்று பிரசாரத்தை மேற்கொண்டார்.

அப்போது, ஓர் வீட்டின் சுவற்றில் பாஜக வேட்பாளர் பிரியங்காவின் போஸ்டரை மத்திய அமைச்சர் ஓட்டியது அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT