நாட்டில் 84.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 84.15 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 84.15 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,20,642 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 84,15,18,026 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 34,09,34,722 இரண்டாம் தவணை - 6,89,23,655 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 15,45,17,383 இரண்டாம் தவணை - 7,22,23,600 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,87,31,605 இரண்டாம் தவணை - 5,39,46,372 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,70,563 இரண்டாம் தவணை - 88,01,251 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,48,120 இரண்டாம் தவணை - 1,47,20,755 |
| மொத்தம் | 84,15,18,026 |