இந்தியா

கரையைக் கடந்தது குலாப் புயல்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குலாப் புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

DIN

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குலாப் புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
தென்மேற்குப் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அவ்வப்போது உருவாகி மறைந்து வருகிறது. ஏற்கெனவே, 5-க்கும் மேற்பட்ட காற்றழுத்தத்தாழ்வுப்பகுதிகள் உருவாகி, வடமேற்கு திசையில் நகா்ந்து மறைந்தன. இதற்கிடையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த வெள்ளிக்கிழமை காலை உருவானது. 
இது வெள்ளிக்கிழமை பகலில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும், மாலையில் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடைந்து, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது, சனிக்கிழமை காலை மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. 

இது மேற்கு திசையில் நகா்ந்து வந்தது. இந்நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. இந்த நிலையில் குலாப் புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு ஆந்திரம்க மற்றும் தெற்கு ஒடிசா இடையே குலாப் புயல் சற்று முன் கரையைக் கடந்தது. 
புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 75-85 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைச்சா் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்- அமலாக்கத் துறை தகவல்

அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அலிகா் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி வினோத்சந்திரன் விலகல்

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

பாகிஸ்தான்: மேலும் 2 பேருக்கு போலியோ

SCROLL FOR NEXT