உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்
உத்தரகண்ட் மாநிலத்தின் பிதோரோகார்க் பகுதியில் இன்று(செப்-29) மாலை 3.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
உத்தரகண்ட் மாநிலத்தின் பிதோரோகார்க் பகுதியில் இன்று(செப்-29) மாலை 3.40 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 82 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
மிதமான நிலநடுக்கம் என்பதால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
முன்னதாக அசாம் மாநிலத்தின் தெஸ்பூர் பகுதியில் இன்று(செப்-28) அதிகாலை 12.52 மணி அளவில் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.