‘தலித் முதல்வரானதை சித்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’: ஆம் ஆத்மி விமரிசனம் 
இந்தியா

‘தலித் முதல்வரானதை சித்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’: ஆம் ஆத்மி விமரிசனம்

தலித் ஒருவர் மாநில முதல்வரானதை சித்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஆம் ஆத்மி கட்சி விமரிசித்துள்ளது.

DIN

தலித் ஒருவர் மாநில முதல்வரானதை சித்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஆம் ஆத்மி கட்சி விமரிசித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட நிலையில் அவருடனான மோதல் காரணமாக தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நவ்ஜோத் சிங் சித்து முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரண்ஜீத் சன்னி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ்,  “நவ்ஜோத் சிங் சித்து தலித் மக்களுக்கு எதிரானவர் என இதன்மூலம் தெரியவருகிறது. தலித் ஒருவர் முதல்வராக பதவியேற்றதை சித்துவால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் போனது வருத்தமானது” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அது நான் இல்லை... ருக்மணி வசந்த் எச்சரிக்கை!

15 பாலஸ்தீனர்கள் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 300 ஆக அதிகரிப்பு!

பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பாடல்: பினராயி விஜயன் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்

இது மம்மூட்டிக்கான அங்கீகாரம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT