தில்லியில் புதிதாக 47 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 47 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,868 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 72,386 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.06 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | பண்டிகைகள் நெருங்குகின்றன.. அதனால்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை
மேலும் 39 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வழக்கம்போல் நோய்த் தொற்று உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இதுவரை மொத்தம் 14,13,381 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 25,087 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 400 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.