முகப்பு
இந்தியா

நாட்டில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன: நிதின் கட்கரி

நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை விபத்துகள் குறைந்து வருவதாக மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
நிதின் கட்கரி (கோப்புப்படம்)
பகிர்:

நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை விபத்துகள் குறைந்து வருவதாக மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சாலை விபத்துகள் குறித்த எழுத்துப்பூர்வ பதிலை மாநிலங்களவையில் நிதின் கட்கரி தாக்கல் செய்தார்.

“போக்குவரத்து ஆய்வுத் துறையின் தகவலின்படி, கடந்த 2018இல் 4,67,044, 2019இல் 4,49,002 மற்றும் 2020இல் 3,66,138 சாலை விபத்துகள் நடந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக விபத்தின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் விபத்துகள் குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →