முகப்பு
இந்தியா

ஒமைக்ரான்: தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இன்று அறிவித்தது. மேலும் ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார். 

இந்த நிலையில் ஒமைக்ரான் பாதித்த 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 5 நபர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒமைக்ரான் உறுதியான 2 பேரில் ஒருவர் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என கர்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வயது 66. மற்றொருவரின் வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments