முகப்பு
இந்தியா

7 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடமாற்றம்

நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களின் 7 நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
7 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடமாற்றம்
பகிர்:

நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களின் 7 நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில்,

இந்திய அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு 7 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன் குப்தா பாட்னாவிற்கும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கொல்கத்தாவிற்கும், ஹிமாச்சலப் பிரதேசம் உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்வர் தாகூர் பஞ்சாப் - ஹரியாணாவிற்கு,  கர்நாடகம் உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி. பஜன்த்ரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா ஆகியோட் பாட்னாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அமர்நாத் கெளட் திரிபுராவிற்கும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுபாஷ் சந்த் ஜார்கண்டிற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments