முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 17,681 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,681 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
கேரளத்தில் புதிதாக 17,681 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,681 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 17,681 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 25,588 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 208 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 97,070 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 
கேரளத்தில் மொத்த பலி எண்ணிக்கை 22,987 ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,90,750 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →