ஒடிசா உள்பட 4 மாநிலங்களில் உள்ள 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் 
இந்தியா

ஒடிசா உள்பட 4 மாநிலங்களில் உள்ள 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்

மின்னணு ஏலம் வாயிலாக 2002 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. 

ANI

புது தில்லி: மின்னணு ஏலம் வாயிலாக 2002 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. 

இந்த ஐந்து நிலக்கரி சுரங்க ஏலத்தில் மூன்று சுரங்கங்களை ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் லிமிடட் ஏலம் எடுத்துள்ளது. 

இந்த ஐந்து நிலக்கரி சுரங்கங்களின் புவியியல் இருப்பு 665.08 மில்லியன் டன் ஆகும். இந்தச் சுரங்கங்களின் ஆண்டு ஒட்டுமொத்த இருப்பு 14.756 மெட்ரிக் டன் ஆகும். சத்தீஷ்கர்., ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. 

இந்த ஐந்து நிலக்கரிச் சுரங்கங்களுடன் இதுவரை 47 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மொத்த ஆண்டு இருப்பு 101.440 மில்லியன் டன் ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT