முகப்பு
இந்தியா

ஒடிசா உள்பட 4 மாநிலங்களில் உள்ள 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்

மின்னணு ஏலம் வாயிலாக 2002 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. 

Updated On : 2 ஏப்ரல் 2022, 5:27 pm IST
ஒடிசா உள்பட 4 மாநிலங்களில் உள்ள 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்
பகிர்:

புது தில்லி: மின்னணு ஏலம் வாயிலாக 2002 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. 

இந்த ஐந்து நிலக்கரி சுரங்க ஏலத்தில் மூன்று சுரங்கங்களை ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் லிமிடட் ஏலம் எடுத்துள்ளது. 

இந்த ஐந்து நிலக்கரி சுரங்கங்களின் புவியியல் இருப்பு 665.08 மில்லியன் டன் ஆகும். இந்தச் சுரங்கங்களின் ஆண்டு ஒட்டுமொத்த இருப்பு 14.756 மெட்ரிக் டன் ஆகும். சத்தீஷ்கர்., ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. 

Advertisement

Advertisement

இந்த ஐந்து நிலக்கரிச் சுரங்கங்களுடன் இதுவரை 47 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மொத்த ஆண்டு இருப்பு 101.440 மில்லியன் டன் ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.