முகப்பு
இந்தியா

இமாச்சலில் ஆம் ஆத்மி ஊர்வலம்: கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பங்கேற்பு

இமாச்சல் பிரதேசத் தேர்தலில் போட்டியிட இருக்கும் அம்மாநில ஆம் ஆத்மியை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கேஜரிவால்  ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார்.

Updated On : 6 ஏப்ரல் 2022, 3:49 pm IST
பகிர்:

இமாச்சல் பிரதேசத் தேர்தலில் போட்டியிட இருக்கும் அம்மாநில ஆம் ஆத்மியை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கேஜரிவால்  ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. 

இந்நிலையில், பஞ்சாப் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் பல்வேறு மாநிலத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் ஆம் ஆத்மி கட்சினரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று இமாச்சலில் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

ஊர்வலத்தின்போது கேஜரிவால்  ‘முதலில் தில்லியில் ஊழலை ஒழித்தோம், பின்னர் பஞ்சாபில். இப்போது இமாச்சலப் பிரதேசத்தில் ஊழலை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது’ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.