இந்தியா

ஜம்மு எல்லையில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

DIN

ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லையில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடா்பாக டிஐஜி எஸ்.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையையொட்டி அக்னூரில் உள்ள பர்ப்வால் துணைப் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். 

முன்னதாக, எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய ஒரு பையை மீட்டனர். 

அந்த பையில், நவீன துப்பாக்கிகள், 2 ரைபிள் மேகசின்கள், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 2 பிஸ்டல்கள், 49 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 4 பிஸ்டல் மேகசின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்திய எல்லைக்குள் ஆயுதங்களைக் கடத்த முயல்வது குறித்து சில உளவுத்துறை உள்ளீடுகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர், அதைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்புப் படையினர் அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டு, தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT