இந்தியா

அசாமில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 3 பேர் கைது

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

DIN

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

லஹரிகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டான்டியல்போரி பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஒரு வாகனத்தை மறித்து அங்கிருந்த 390 கிராம் ஹெராயினை மீட்டதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லால் பருவா தெரிவித்தார். 

28 சோப்புப் பெட்டிகளில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக அவர் கூறினார். விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT