முகப்பு
இந்தியா

மனதின் குரல்: மக்களிடம் கருத்துக் கேட்கிறாா் பிரதமா் மோடி

பிரதமர் மோடி, இம்மாதம் ஒலிபரப்பாக உள்ள தமது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
கோப்புப்படம்
பகிர்:

பிரதமர் மோடி, இம்மாதம் ஒலிபரப்பாக உள்ள தமது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளார்.

88-வது மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “மனதின் குரல் மூலம் நாம் அடிமட்ட அளவில் மாற்றம் ஏற்படுத்துபவர்களின் அசாதாரணமான சாதனைகளை கொண்டாடி வருகிறோம். இத்தகைய உந்து சக்தியாக திகழும் வாழ்க்கைப் பயணங்களை நீங்கள் அறிவீர்களா? அவற்றை 24-ந் தேதி ஒலிபரப்பாகும் இம்மாத நிகழ்ச்சிக்காக பகிருங்கள். 

MyGov தளத்திலோ,  NaMo செயலியிலோ அல்லது  1800-11-7800 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ பகிர்ந்து கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →