இந்தியா

தில்லியில் ஆசாத் மார்க்கெட் பகுதியில் தீவிபத்து: 5 பேர் காயம்

DIN

தில்லியில் ஆசாத் மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் காயமடைந்தனர். 

தில்லியில் ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள மூன்று கட்டடங்களில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 20 வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த சம்பவத்தின்போது வெல்டிங் கடையில் உள்ள சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர். இருப்பினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT